Abhishegam - Moogambigea Thaayea
தொகுப்பு: அபிஷேகம்
பாடல் : Dr கிருதியா
இசை : அரவிந்த்
பாடியவர்: உன்னிகிருஷ்ணன்
பல்லவி
========
மூகாம்பிகே தாயே
உனை மறவேனோ சொல் மாயே (மூகாம்பிகே)
அலைமேல் அலையும் துரும்பாய்த் திரிந்தேன்
பொல்லூரைக் காணாமலே தாயே
பழியூரில் கிடந்தேனம்மா என்னை
வழியேற்றி வைத்தாயம்மா (மூகாம்பிகே)
சரணம்-1
=======
அறையூரில் விளையாடும் வேளையிலே
பல தவணையே கவலையே நான் சுமந்தேன்
குறையூரில் கரையேறத் தோணியில்லை
மூகாம்பிகே உனையன்றி யாருமில்லை
சொர்ணமா ரேகைகளே சங்கடம் தீர்த்தாயே
சக்கரம் தனைவீசி அக்கரை சேர்த்தாயே
தாயே தாயே தாயே தாயே
மூகாம்பிகே தாயே உனை மறவேனோ சொல் மாயே
மூகாம்பிகே தாயே உனை மறவேனோ சொல் மாயே
தாயே தாயே
Labels: அபிஷேகம், அம்மன், உன்னிகிருஷ்ணன்