உள்ளங்களை நெக்குருகச் செய்வதில் பக்திப் பாடல்களுக்கு இணை வேறு ஏதாவதுண்டா? - அடியேனால் முடிந்தவரை சில பக்திப்பாடல்களின் வரிகளைத் தட்டச்சு செய்கிறேன்..Change your Font Settings to UTF-8 to read the tamil letters here..[View->Encoding->UTF-8]

Tuesday, November 13, 2007

deivam - kundrathilea kumaranukku kondattam

படம்: தெய்வம்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்: பெங்களூர் ரமணி அம்மாள்





பல்லவி
=======


குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் அங்கே
குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம்
குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் அங்கே
குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம்
குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்



சரணம் 1
========



தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம்
தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம்
தெருமுழுதும் பக்தர்களின் ஆனந்தமன்றம்
தெருமுழுதும் பக்தர்களின் ஆனந்தமன்றம்

தங்கம் வைரம் பவளம் முத்து தவழும் தெய்வானை
தங்கம் வைரம் பவளம் முத்து தவழும் தெய்வானை
தாங்கிக் கொண்டாள் வாங்கிக் கொண்டாள் முருகப் பெம்மானை
தாங்கிக் கொண்டாள் வாங்கிக் கொண்டாள் முருகப் பெம்மானை
முருகப் பெம்மானை

குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் அங்கே
குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம்
குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்



பாடலைக் காண இங்கே ..







சரணம் 2
========


உருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை
நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை
உருகிக் சொல்லுங்கள் முருகனின் பேரை
நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை

குழு: வேல்முருகா வெற்றி வேல்முருகா
வேல்முருகா வெற்றி வேல்முருகா

சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்
சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்
அரஹரா பாடுங்கள் வருவதைப் பாருங்கள்
அரஹரா பாடுங்கள் வருவதைப் பாருங்கள்

கந்தனுக்கு வேல்வேல் முருகனுக்கு வேல்வேல்
கந்தனுக்கு வேல்வேல் முருகனுக்கு வேல்வேல்

குழு: கந்தனுக்கு வேல்வேல் முருகனுக்கு வேல்வேல்
கந்தனுக்கு வேல்வேல் முருகனுக்கு வேல்வேல்
வேல்முருகா வெற்றி வேல்முருகா அரோகரா
வேல்முருகா வெற்றி வேல்முருகா

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
அரோகரா

குழு: வேல்முருகா வெற்றி வேல்முருகா
வேல்முருகா வெற்றி வேல்முருகா

Labels: , ,

Monday, November 12, 2007

deivam - varuvaandi tharuvaandi malaiyaandi

படம்: தெய்வம்
பாடல்: கவியரசர் கண்ணதாசன்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
பாடியவர்கள்: சூலமங்கலம் ராஜலட்சுமி, விஜயா எம்.அர் [Reference: Music India Online]




பல்லவி
=======


வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வாண்டி அவன்
வரம் வேண்டி வருவோருக்கு அருள்வாண்டி
ஆண்டி
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழநி மலையாண்டி

சரணம் 1
========


சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி அந்த
சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி அன்று
சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி அன்று
சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி

நவலோக மணியாக நின்றாண்டி
நவலோக மணியாக நின்றாண்டி என்றும்
நடமாடும் துணையாக அமைந்தாண்டி என்றும்
நடமாடும் துணையாக அமைந்தாண்டி அவன் தாண்டி

வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழநி மலையாண்டி

பாடலைக் காண இதோ இங்கே ..






சரணம் 2
========


பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி சுவைப்
பஞ்சாமிர்தம் தன்னில் குளிப்பாண்டி
பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி சுவைப்
பஞ்சாமிர்தம் தன்னில் குளிப்பாண்டி

காலாற மலையேற வைப்பாண்டி
காலாற மலையேற வைப்பாண்டி கந்தா
என்றால் இங்கு வந்தேன் என்று கந்தா
என்றால் இங்கு வந்தேன் என்று சொல்லி

வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழநி மலையாண்டி

சரணம் 3
========


சித்தர்கள் சீடர்கள் பலகோடி அவன்
செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி
சித்தர்கள் சீடர்கள் பலகோடி அவன்
செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி முருகனின்
செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி
சித்தர்கள் சீடர்கள் பலகோடி அவன்
செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி

பக்தர்கள் தினந்தோறும் பலர்கூடி
பக்தர்கள் தினந்தோறும் பலர்கூடி திருப்புகழ்
பாடி வருவார்கள் கொண்டாடி திருப்புகழ்
பாடி வருவார்கள் கொண்டாடி


வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
வரம் வேண்டி வருவோருக்கு அருள்வாண்டி ஆண்டி
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
பழநி மலையாண்டி பழநி மலையாண்டி பழநி மலையாண்டி

Labels: , , ,

Friday, May 11, 2007

Abhishegam - Moogambigea Thaayea

தொகுப்பு: அபிஷேகம்
பாடல்    : Dr கிருதியா
இசை     : அரவிந்த்
பாடியவர்: உன்னிகிருஷ்ணன்  
 
 
பல்லவி
========
மூகாம்பிகே தாயே 
உனை மறவேனோ சொல் மாயே (மூகாம்பிகே)
அலைமேல் அலையும் துரும்பாய்த் திரிந்தேன்
பொல்லூரைக் காணாமலே தாயே
பழியூரில் கிடந்தேனம்மா என்னை
வழியேற்றி வைத்தாயம்மா (மூகாம்பிகே)
 
 
சரணம்-1
=======
அறையூரில் விளையாடும் வேளையிலே
பல தவணையே கவலையே நான் சுமந்தேன்
குறையூரில் கரையேறத் தோணியில்லை
மூகாம்பிகே உனையன்றி யாருமில்லை
சொர்ணமா ரேகைகளே சங்கடம் தீர்த்தாயே
சக்கரம் தனைவீசி அக்கரை சேர்த்தாயே
தாயே தாயே தாயே தாயே
 
மூகாம்பிகே தாயே உனை மறவேனோ சொல் மாயே
மூகாம்பிகே தாயே உனை மறவேனோ சொல் மாயே
தாயே தாயே

Labels: , ,

Abhishegam - Aaraadhu Aaraadhu

தொகுப்பு : அபிஷேகம்
இசை : அர்விந்த்
பாடல் : Dr கிருதியா
பாடியவர்: உன்னிகிருஷ்ணன்


பல்லவி
======
ஆறாது ஆறாது ஆறாது
ஆறு முகமின்றி என்நெஞ்சு ஆறாது (ஆறாது ஆறாது)
சரவணக் குளக்கரை நறுமணத் திருக்கரை
பாடாமல் மனம் ஆறுமோ
உன்னைப் பாடாதது தமிழாகுமோ (சரவணக்)
முருகா முருகா அருள்வாய் குமரா
முருகா முருகா அருள்வாய் குமரா (ஆறாது ஆறாது)


சரணம்-1
=======
பழமுதிர் சோலையில் அழகிய மாமயில்
பழகிய நடையதைப் பாடிடவா
திருமுருகாவென உருகிடும் சேவலின்
சேதியை செவியெங்கும் சேர்த்திடவா
அலையாடும் செந்தூர் அதிலாடும் ஒருதேர் (அலையாடும்)
விளையாடும் கோலம் வரைந்திடவா
வெல் என்று சொல்லி வேல் ஒன்று செல்லும் (வெல் என்று)
சம்ஹார பாவம் பாடிடவா
பாடாமல் என் ஆசை ஆறிடுமா
முருகா முருகா அருள்வாய் குமரா (முருகா முருகா)

(ஆறாது ஆறாது)


சரணம்-2
=======
அண்ணாந்து திருநீறு அணிகின்ற அடியார்கள்
எண்ணத்தில் உன்பேரை எழுதிவைப்பேன்
தென்னாடு சிவனாரும் தொழுகின்ற வடிவேலை
தேடாது போவோரைத் தெளிய வைப்பேன்
குறமாது வள்ளி குறியொன்று சொல்லி (குறமாது வள்ளி)
வாராத நாளில் தூது செல்வேன்
அழியாத புகழை அருணகிரித் தமிழை (அழியாத)
அடிவாசல் தோறும் எழுதிவைப்பேன்
எழுதாத நாளைப் பழுது என்பேன்
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா அருள்வாய் குமரா


ஆறாது ஆறாது ஆறுமுகமின்றி என்நெஞ்சு ஆறாது
ஆறாது ஆறாது ஆறுமுகமின்றி என்நெஞ்சு ஆறாது
சரவணக் குளக்கரை நறுமணத் திருக்கரை
பாடாமல் மனம் ஆறுமோ
உன்னைப் பாடாதது தமிழாகுமோ (சரவணக் குளக்கரை)
முருகா முருகா அருள்வாய் முருகா
முருகா முருகா முருகா குமரா

Labels: , ,

Thursday, April 19, 2007

Abhishegam - Manamea Manamea

தொகுப்பு: அபிஷேகம்
பாடல்    : Dr கிருதியா
இசை     :  அரவிந்த்
பாடியவர்: உன்னிகிருஷ்ணன்
 
பல்லவி
=======
ஆ: ஓம்சக்தி ஓம் ஓம்சக்தி ஓம் 
      ஓம்சக்தி ஓம் 
 
      மனமே மனமே மயங்காதிரு 
      கருமாரி தாய் மடிசேர்ந்திடு (மனமே) 
      நெற்றியிலே திருநீரு நெஞ்சத்திலே அவபேரு 
      ஆயிரம் கண்ணுடையவளே அடைக்கலம் எனப்பாடு 
      சுடுநீர் போல மனமே இளநீர் ஆகும் உடனே 
      சமயபுரத்தில் அபயம் இருக்கு ஏக்கம் கொள்ளாதே 
 
குழு: ஓம்சக்தி ஓம்சக்தி திருநாமமே 
       ஓயாமல் சொன்னாலே நலமாகுமே (ஓம்சக்தி)
 
சரணம்-1
=========
ஆ:  திருமேனியில் கருநாகமே புரண்டாடுதே 
      அது கரையேறப் பலகாலம் வழிதேடுதே (திருமேனியில்) 
      மனமே கண்மூடிப் புரண்டாய் தெருக்கோடி 
      அம்மா மகமாயி அவளது மடிதேடி 
      ஓடி ஒருவார்த்தை பேசாததேன் 
      காயும் பயிர்போல முகவாட்டமேன் 
      பொன்னி ஆறு அன்னை மனசு ஏக்கம் கொள்ளாதே 
 
குழு: ஓம்சக்தி ஓம்சக்தி திருநாமமே 
       ஓயாமல் சொன்னாலே நலமாகுமே (ஓம்சக்தி)

ஆ: மனமே மனமே மயங்காதிரு....

சரணம்-2
=========
ஆ: கருவேப்பிலை ஒருநாளில் சருகாகுமே 
      நம் கருமாரி வேப்பிலையோ மருந்தாகுமே (கருவேப்பிலை) 
      சருகாய் உலருவதும் மருந்தாய் வாழ்வதும் 
      மனமே உனதுவசம் உரைப்பது சமயபுரம் 
      ஆயி மகமாயி சரணாலயம் 
      தேடி வருவோர்க்கு நிழலேதரும் 
      உன் கவலையெடுத்துக் காலில்செலுத்து சாந்தம் உண்டாகும்
 
குழு: ஓம்சக்தி ஓம்சக்தி திருநாமமே 
       ஓயாமல் சொன்னாலே நலமாகுமே (ஓம்சக்தி)

ஆ: மனமே மனமே மயங்காதிரு....

Labels: , ,

Thursday, May 25, 2006

விநாயகனே வினைதீர்ப்பவனே

பாடல் விநாயகனே வினைதீர்ப்பவனே
பாடியவர் சீர்காழி

பல்லவி
=======
விநாயகனே வினைதீர்ப்பவனே
வேழமுகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினைதீர்ப்பவனே
வேழமுகத்தோனே ஞால முதல்வனே


சரணம் - 1
=========
குணாநிதியே குருவே சரணம்
குணாநிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்
குறைகள் களைய இதுவே தருணம்
(விநாயகனே)


சரணம் - 2
=========
உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
கணநாதனே மாங்கனியை உண்டாய்
கணநாதனே மாங்கனியை உண்டாய் ஆ ஆ
கதிர் வேலவனின் கருத்தில் நின்றாய்
கதிர் வேலவனின் கருத்தில் நின்றாய்


விநாயகனே வினைதீர்ப்பவனே
வேழமுகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினைதீர்ப்பவனே

Labels: ,

Tuesday, May 16, 2006

முதல் பதிவு.. சோதனை முயற்சி...

முதல் பதிவு.. சோதனை முயற்சி...

Labels: ,